Home

Sunday 24 March 2024

அடையாளம் - சிறுகதை

 இரண்டரை வருஷம் ஜெயில்வாசம் மாதிரி துபாயில் கழித்துவிட்டு ஆசை ஆசையோடு வந்திருந்த ராகவனை அப்பா என்று கூப்பிடாமல் குழந்தை ராணி மாமா என்று கூப்பிட்டதுதான் பிரச்சனை. ஆனமட்டுக்கும் முயற்சி செய்து பலிக்காமல் மிகவும் மனம் உடைந்த ராகவனை சமாதானம் செய்து, தான் குழந்தையை எப்படியும் அப்பாவென்று கூப்பிட வைப்பது உறுதியென்றும் இதெல்லாம் அற்ப விஷயம் என்றும் இதற்கெல்லாம் மனம் உடைந்து தளரலாகாது என்றும் சொன்னாள் கல்பனா.

உபயத்துல்லா : நல்லாற்றின் நின்ற துணை

  

முதல் உலகப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் இஸ்லாமியர்கள் வசிக்கும் துருக்கி தேசத்துக்கு எந்தப் பாதிப்பும் நேராதவகையில் பாதுகாக்கப்படும் என்று பிரிட்டன் அரசு முதலில் அறிவித்தது. ஆனால் போர் முடிவடைந்ததும் கொடுத்த வாக்குறுதியை மறந்து  துருக்கியின் மீது கடுமையான நிபந்தனைகளை விதிக்கத் தொடங்கியது. மேலும்  துருக்கியின் ஆசியப்பகுதிகளை பிரிட்டனும் பிரான்சும் பங்கு போட்டுக்கொண்டன.

Sunday 17 March 2024

நான்கு கணங்கள்

  

அதீதம் என்பதற்கான வரையறையை வகுத்துக்கொண்டால் ஸ்ரீராமின் குறுநாவலை வாசிப்பது எளிதாகிவிடும். இயல்பான நிலையிலிருந்து மாறுபட்டது என்பது அதீதத்தின் முதல் குணம். அரைக்கணமோ ஒரு கணமோ மட்டும் நீடித்து உச்சத்தைத் தொட்டு மறைந்துபோவது என்பது இரண்டாவது குணம். உண்மையிலேயே அப்படி ஒரு கணம் நிகழ்ந்ததா என எண்ணித் துணுக்குறும் அளவுக்கு கண்ணை மூடி கண்ணைத் திறப்பதற்குள் நிகழ்ந்து முடிந்து இயல்பான நிலைக்குத் திரும்பி நிற்பது என்பது மூன்றாவது குணம். அதீதத்தால் நேர்ந்தது என சுட்டிக்காட்டிச் சொல்லத்தக்க வகையில் ஒரு விளைவை நம் கண் முன்னால் பார்க்கும்போது அதை நம்மால் முற்றிலும் மறுக்கவும் முடியாமல் முற்றிலும் ஏற்கவும் முடியாமல் தடுமாறி நின்றுவிடுகிறோம். அந்த மாயநிலை அதன் நான்காவது குணம். அத்தகு மாயத்தன்மை பொருந்திய ஒரு தருணமே மாயாதீதமான கணம். ஸ்ரீராம் தன் குறுநாவலில் அத்தகு ஒரு மாயாதீதமான கணத்தையும் அதன் தொடர்விளைவுகளையும் நிகழ்த்திக்காட்டுகிறார்.

காட்சிப்படுத்தும் கலை

  

கர்நாடக மாநிலத்தில் துங்கபத்திரை ஆற்றங்கரையோரத்தில் உள்ள ஹொஸபேட்டெ என்னும் ஊரில் நான் சில ஆண்டுகள் இளநிலை பொறியாளராகப் பணிபுரிந்தேன்.  அங்கிருந்து பதின்மூன்று கிலோமீட்டர் தொலைவில் வரலாற்றுச் சின்னமான ஹம்பி இருக்கிறது.  பதினாறாம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் தலைநகரமாக இருந்த புகழ்பெற்ற நகரம். சிற்பக்கலைக்குப் பேர்போன இடம்.

Sunday 10 March 2024

தாய்ப்பாசம் என்னும் விழுது

 

பர்மாவில் 1908ஆம் ஆண்டில் அண்ணாஜிராவ் என்பவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அடுத்து சில ஆண்டுகளிலேயே அவர் தன் குழந்தைகளோடு கர்நாடகத்தின் கடற்கரை ஊரான பைந்தூருக்கு இடம்பெயர்ந்து வந்தார். அந்த ஊரில் ஆரம்பப்பள்ளிப்படிப்பு மட்டுமே அந்தப் பெண் குழந்தைக்குக் கிடைத்தது. பன்னிரண்டு வயதிலேயே திருமணம் நடந்துவிட்டது. அவரை மணந்துகொண்டவர் சிவசங்கரராயர் என்னும் இளைஞர். அவர் அதுவரை செய்துவந்த வேலையை உதறிவிட்டு காந்தியடிகள் தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டார். கதராடைகள் உடுத்தினார். போராட்டத்தில் ஈடுபட்டு அடிக்கடி சிறைக்குச் சென்றார். விடுதலை பெற்ற பிறகு தினமும் நூல் நூற்றார். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ஏதேனும் பத்திரிகைகளில் மெய்ப்புத் திருத்துநராக வேலை செய்து பனமீட்டினார். கட்டுரைகளை எழுதினார்.  நிரந்தரமான ஒரு வேலை இல்லை. பதினாறு வயதில் அந்தப் பெண் முதல் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.

ஒரு புதிய தொகுப்புக்கான கனவு

  

ஜெயகாந்தன் எழுதிய ரிஷிமூலம் என்னும் நெடுங்கதை எழுபதுகளில்  தினமணி கதிரில் தொடராக வெளிவந்தது. நான் அப்போது உயர்நிலைப்பள்ளி மாணவன். எங்கள் அப்பாவின் நண்பருடைய மகன் எங்கள் ஊர் நூலகத்தில் பணியாற்றிவந்தார். அந்த நெருக்கத்தின் விளைவாக நீண்ட நேரம் நூலகத்திலேயே உட்கார்ந்து எல்லா வார, மாத இதழ்களையும் எடுத்துப் படிப்பேன்.

Saturday 2 March 2024

மகாதேவ தேசாய் : முடிவுறாத பக்திப்பாடல்

  

எல்.எல்.பி. தேர்வில் வெற்றி பெற்றதையடுத்து சூரத் நகரத்தைச் சேர்ந்த இளைஞரொருவர் அகமதாபாத் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்துவிட்டு தொழிலைத் தொடங்கினார். ஆனால் அவருக்கு அங்கே போதிய வருமானம் கிடைக்கவில்லை. அவருக்கு சமஸ்கிருதம், குஜராத்தி, மராத்தி, ஆங்கிலம் என பல மொழிகளில் பயிற்சி இருந்தது. அதனால் வழக்கறிஞர் வேலையைத் துறந்துவிட்டு ஒரு நிறுவனத்தில் மொழிபெயர்ப்பாளராக வேலைக்குச் சேர்ந்தார். சில மாதங்களில் அந்த வேலையிலும் சலிப்பு ஏற்பட்டதால் அங்கிருந்து வெளியேறி ஒரு வங்கியில் வேலைக்குச் சேர்ந்தார். திடீரென வங்கி நிர்வாகம் அவரை பம்பாய் நகரத்துக்கு மாற்றியது. அங்கு செல்ல விருப்பமில்லாத அவ்விளைஞர் அந்த வேலையையும் துறந்து கூட்டுறவுத்துறையில் உதவி இயக்குநராக இணைந்து பணிபுரியத் தொடங்கினார்.